Thursday, 21 April 2016

ஜோக்கர் கதை அல்வா சாப்பிடுவது மாதிரி இருந்தது! - சோமசுந்தரம்



ரண்யகாண்டம், ஜிகர்தண்டா உள்பட சில படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்தவர் சோமசுந்தரம். கூத்துப்பட்டறை நடிகரான இவர், தற்போது ராஜூமுருன் இயக்கியுள்ள ஜோக்கர் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சோமசுந்தரம் கூறுகையில்,
இந்த படத்தில் நான் கமிட்டானதும் பலரும் என்ன அரசியல் படத்தில் நடிக்கிறீர்களோ? என்றனர். அப்போது ஜோக்கர் முழுக்க முழுக்க அரசியல் படமல்ல, காதல் கலந்த அரசியல் படம் என்று கூறினேன். மேலும், ஆரண்யகாண்டம் படத்தைப்பார்த்து விட்டு என்னை வேறொரு கேரக்டருக்காகத்தான் ராஜூமுரு கன் அணுகினார். ஆனால் திருவண்ணாமலைக்கு என்னை காண வந்த அவர், எனது வாழ்க்கை முறை, தோற்றத்தைப்பார்த்த பிறகு ஒரு வாரம் கழித்து என் படத்தில் ஜோக்கராகவே நீங்கள் நடித்து விடுங்கள் என்றார். வேண்டாம் சார் ரிஸ்க் எடுக்காதீங்க என்றேன். இருந்தாலும் அவர் விடவில்லை.


அதன்பிறகு ஸ்கிரிப்ட் படிச்சேன். ஓரளவு நடிப்பு தெரிந்தவர்களுக்கு இந்த ஸ்கிரிப்ட் அல்வா சாப்பிடுவது மாதிரி. இப்படி பண்ணலாம், அப்படி பண்ணலாம் என நிறைய யோசித்தேன். என்றலும், ராஜூமுருகன் ஒரு கண்ட்ரோலில் வைத்துதான் என்னை நடிக்க வைத்தார். அவரை மீறி நான் எதுவும் பண்ணவில்லை. நான் என் நண்பர்களிடம் சொல்வேன், நாடகத்துறை நடிகர்களுக்கு, சினிமாத்துறை டைரக்டர்களுக்கு சினிமான்னா அது டைரக்டர்களுக்குத்தான். அவர்கள் இல்லாமல் நடிகர்கள் பிரதிபலிக்க முடியாது. நடிகர்கள் நடித்த விடலாம் பின்னர் அதை பிரேமுக்குள் கொண்டு வந்து டெக்னிக்கலாக வேலை செய்வது என டைரக்டர்களின் மெனக்கெடல் நிறைய உள்ளது. அதோடு படங்களை தியேட்டர் வரை எடுத்து செல்வது டைரக்டர்கள்தான். அதனால் என்னைப்பொறுத்தவரை சினிமா இயக்குனர்களின் மீடியா.

ராஜூமுருன் இயக்கியுள்ள ஜோக்கர் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சோமசுந்தரம் கூறுகையில்
மேலும். இந்த படத்தை எல்லோரும் எடுக்க மாட்டார்கள். ஏனென்றால் இது ஒரு வித்தியாசமான படம். டெய்லி நமக்கு மருந்து தேவைப்படாது. ஆனால் நோய்ப்பட்டால் மருந்து தேவைப்படுதில்லையா. அதேசமயம், அந்த மாதிரி இது வெறும் மருந்தாக மட்டுமே இல்லாமல், மூவியாகவும் இருக்கும் என்றார்

No comments:

Post a Comment