துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் கடந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகை ரிலீஸாக வெளியான 'சார்லி' படத்தின் 100வது நாள்

கொண்டாட்டம் நேற்று கொச்சியில் நடைபெற்றது. மார்ட்டின் பரக்கத் இயக்கியிருந்த இந்தப்படத்திற்கு கோபிசுந்தர் இசையமைத்திருந்தார். இந்தப்படத்தின் 100வது நாள் விழாவில் மம்முட்டி, நாசர், இயக்குனர் லால் ஜோஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். சார்லி படத்துக்காக சிறந்த ஆர்ட் டைரக்டர் அவார்டு பெற்றிருந்த ஜெயஸ்ரீ லட்சுமி நாராயணன், 100வது நாள் நினைவு ஷீல்டை வித்தியாசமாக வடிவமைத்து அனைவரையும் ரசிக்க வைத்தார்.
இந்த விழாவின் துவக்கத்தில் இந்தப்படத்தில் நடித்த மறைந்த நடிகை கல்பனாவுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. படத்தில் கதாநாயகிகளாக நடித்த பார்வதி மற்றும் அபர்ணா கோபிநாத் ஆகியோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.. இயக்குனரும் நடிகருமான ரெஞ்சி பணிக்கர் தன்னையும் இந்தப்படத்தில் ஒரு பகுதியாக இணைத்துக்கொண்டதற்கு பெருமைப்படுவதாக கூறினார்.. விழாவில் பேசிய நாசர் கூடுதலாக நேரம் கேட்டு பெற்று படக்குழுவினரை வாழ்த்தி பேசினார். இந்தப்படத்தில் நாசர் கொஞ்ச நேரமே வரும் ஒரு மேஜிக் மேனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கொண்டாட்டம் நேற்று கொச்சியில் நடைபெற்றது. மார்ட்டின் பரக்கத் இயக்கியிருந்த இந்தப்படத்திற்கு கோபிசுந்தர் இசையமைத்திருந்தார். இந்தப்படத்தின் 100வது நாள் விழாவில் மம்முட்டி, நாசர், இயக்குனர் லால் ஜோஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். சார்லி படத்துக்காக சிறந்த ஆர்ட் டைரக்டர் அவார்டு பெற்றிருந்த ஜெயஸ்ரீ லட்சுமி நாராயணன், 100வது நாள் நினைவு ஷீல்டை வித்தியாசமாக வடிவமைத்து அனைவரையும் ரசிக்க வைத்தார்.
இந்த விழாவின் துவக்கத்தில் இந்தப்படத்தில் நடித்த மறைந்த நடிகை கல்பனாவுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. படத்தில் கதாநாயகிகளாக நடித்த பார்வதி மற்றும் அபர்ணா கோபிநாத் ஆகியோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.. இயக்குனரும் நடிகருமான ரெஞ்சி பணிக்கர் தன்னையும் இந்தப்படத்தில் ஒரு பகுதியாக இணைத்துக்கொண்டதற்கு பெருமைப்படுவதாக கூறினார்.. விழாவில் பேசிய நாசர் கூடுதலாக நேரம் கேட்டு பெற்று படக்குழுவினரை வாழ்த்தி பேசினார். இந்தப்படத்தில் நாசர் கொஞ்ச நேரமே வரும் ஒரு மேஜிக் மேனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment