ரு காலத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் மாலா மணியன். பின்னர் தனியார் தொலைக்காட்சியில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தார். பின்னர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த மாலா மணியன் ஓ காதல் கண்மணி படத்தயாரிப்பில் முக்கிய பங்காற்றினார். நடிகை கௌதமிக்கு மிக நெருங்கிய தோழியாக இருந்தார் இந்நிலையில் கமல்ஹாசனின் படத் தயாரிப்பு நிறுவனத்தில் பல மாற்றங்களை செய்தார் கமல். அவரது ஆபிஸ் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள சரியான ஆள் இல்லை என்பதால் மாலா மணியனை ராஜ்கமல் நிறுவனத்தின் நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டாராம் கௌதமி. அவரது அழைப்பை தட்ட முடியாமல் கமல்ஹாசனின் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார் மாலா மணியன்.
ராஜ்கமல் பட நிறுவனம் இவரது நிர்வாகத்தின் கீழ் வந்த பிறகுதான் கமலுக்கு புதிய பி.ஆர்.ஓ.வை நியமித்துள்ளார். அது மட்டுமல்ல, அலுவலகத்திலும் பல மாற்றங்களைக் கொண்டு வர திட்டமிட்டிருக்கிறாராம். மாலா மணியனின் நிர்வாகத்திறமையைக் கண்டு கமலே பாராட்டினாராம். மகிழ்ச்சியில் இருக்கிறார் மாலா மணியன். இவரது வருகைக்குப் பிறகு அனேகமாக இயக்குநர் மகிழ்திருமேனிக்கு கமலிடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைக்கலாம்.

ராஜ்கமல் பட நிறுவனம் இவரது நிர்வாகத்தின் கீழ் வந்த பிறகுதான் கமலுக்கு புதிய பி.ஆர்.ஓ.வை நியமித்துள்ளார். அது மட்டுமல்ல, அலுவலகத்திலும் பல மாற்றங்களைக் கொண்டு வர திட்டமிட்டிருக்கிறாராம். மாலா மணியனின் நிர்வாகத்திறமையைக் கண்டு கமலே பாராட்டினாராம். மகிழ்ச்சியில் இருக்கிறார் மாலா மணியன். இவரது வருகைக்குப் பிறகு அனேகமாக இயக்குநர் மகிழ்திருமேனிக்கு கமலிடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைக்கலாம்.

No comments:
Post a Comment